Tuesday, June 27, 2017

முதலார் முழக்கம்2017


முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகத்தினால் முதலூர் முழக்கம் எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக் கழகத்தினர் இரண்டுக்கு பூச்சியம் என்ற கோள்கள் வித்தியாசத்தில் முதலிடத்தினை பெற்றுக்கொண்டனர்.
உயிரிழந்த உறவுகளின் ஞாபகார்த்தமாகவும், விளையாட்டுக்கழகத்தின் 56வது ஆண்டு நிறைவினையும் முன்னிட்டு முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஞாயிறு(25) மற்றும் திங்கள்(26) ஆகிய இரண்டு தினங்கள் நடாத்தப்பட்டது.
இப்போட்டியில் 26விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்று, இறுதிப் போட்டிக்கு கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினரும், கரவெட்டி ஆதவன் அணியினரும் தெரிவாகி கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினர் கரவெட்டி ஆதவன் அணியினருக்கு எதிராக இருகோள்களை இட்டு முதலிடத்தினை பெற்றுக் கொண்டனர்.
போட்டியில் முதலாம், இரண்டாம் இடங்களை பெற்ற விளையாட்டுக்கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணம், பணப்பரிசு மற்றும் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன. மேலும் சிறந்த விளையாட்டு வீரர்கள், சிறந்த பந்துக்காப்பாளர், மூன்றாம், நான்காம் இடங்களை பெற்றவர்களுக்கும் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆகியோர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.









Wednesday, October 28, 2015

சம்பவம்


படித்ததில் மிக பிடித்தது ......
{ படித்த போதே என்னை கண்கலங்க வைத்த
ஆழகான குட்டி சம்பவங்கள் ........ படிக்கும் போது
பாருங்கள் . உங்களை கூட உணர்ச்சிவச பட
வைக்கும் .}

சம்பவம்-1
----------------
24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே
பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன
என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம்
தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப
பட்டுக்கொண்டனர். மறுபடியும் அந்த
வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்.
இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் "நீங்கள்
ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம்
காட்டக் கூடாது என்றனர்" அதற்கு அந்த
வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார். "நாங்கள் டாக்டரிடம்
இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு
மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை
தீர்மானிக்க
நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம். சில
நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட
வைக்கலாம்.

'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடைபோடதிற்கள.

சம்பவம்-2
----------------
ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு
ஆப்பிள் வைத்திருந்தாள்.. அங்கு வந்த
அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள்
வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,
பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்..
பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும்
கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து
போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த
முடியாமல் தவித்தாள்.
உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான்
இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....
நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டுமானாலும்
இருக்கலாம். எவ்வளவு அனுபவமும்
இருக்கலாம்..அறிவு வீஸ்தீரமாகவும்
இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி
கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம்
தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல்
,அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..
மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய
கணக்கு தவற்க்கூடாது.

சம்பவம்-3
----------------
ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு
ஆட்டையும் வளர்த்து வந்தான்.
அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக
இருந்தன.

ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால்
பாதிக்கப்பட்டது.
அதனால், அந்த விவசாயி குதிரைக்குச்
சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து
வந்தான்..
மருத்துவர் அந்த குதிரையின் நிலையைப்
பார்த்து,
“நான் மூன்று நாட்கள் வந்து மருந்து
தருகிறேன். அந்த மருந்தைக் குதிரைக்குச்
சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட
குதிரை எழுந்து நடந்தால் சரி,
இல்லையெனில் அதனைக் கொன்றுவிட
வேண்டியது தான்” என்று சொல்லியபடி
குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச்
சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக்
கொண்டிருந்தது. விவசாயியும் அந்தக்
குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக்
கொடுத்தான். மறுநாள் வந்த மருத்துவர்,
குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய
மருந்தைக் கொடுத்துச் சென்றார்.
அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான்,

அந்த விவசாயி.பின்பு சிறிது நேரம்
கழித்து,அங்கு வந்த ஆடு, அந்தக்
குதிரையிடம், "நண்பா, நீ எழுந்து நடக்க
முயற்சி செய்.
நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக்
கொன்று விடுவார்கள்" என்று அந்த
குதிரையை ஊக்குவித்தது.
மூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார்.
அவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு,
அந்த விவசாயிடம் "நாளை குதிரை
நடக்கவில்லையெனில், அதனைக் கொன்றுவிட வேண்டும்.

இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி,
மற்றவர்களுக்கும் பரவிவிடும்." என்று
சொல்லிச் சென்றார்.
இதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர்
சென்றதும், குதிரையிடம் வந்து,
“நண்பா!
எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய்.
நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக்
கொன்று விடுவார்கள்” என்று சொல்லியது.
அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக
எழுந்து நடக்கத் தொடங்கியது. தற்செயலாக
அந்தப் பக்கமாக வந்த விவசாயி அசந்து
போகும்படியாக குதிரை ஓடியது.
மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை
அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான்.

அவன் மருத்துவரிடம், "என் குதிரை நன்றாகக்
குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத்
தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த
மருந்துதான் காரணம்.

என் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு
நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும்.
இந்த ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து
கொண்டாடி விடுவோம்” என்றான்.


Tuesday, July 7, 2015


முதலூர் முழக்கம் என வர்ணிக்கப்படும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த. 4,5/07/2015 திகதி சிறப்பாக இடம்பெற்றது இதில் பல அணிகழ் பங்குபற்றி இறுதிப் போட்டிக்கு கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியும். முதலைக்குடா விநாயகர் அணியும் இறுதிச் சுற்றில் முழங்கின இந்த முழக்கத்தில் முதலைக்குடா விநாயகர் அணியினர் 1-0 எனும் வகையி வெற்றி பெற்று சொந்த மண்ணில் சாதனை படைத்தனர்
1ம் இடம்-முதலைக்குடா விநாயகர் அணி
2ம் இடம்-கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணி
3ம் இடம்-அரசடித்தீவு விக்னேஸ்வரா அணி
4ம் இடம்-சில்லிக்கொடியாறு பராசக்தி அணி



Thursday, March 19, 2015

முதலைக்குடா ஸ்ரீ பாலையடி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயங்களின் புகழ்பாடும் பாலையடி நாயகா பாடல் இறுவட்டு பாடல் வெளியீடு கடந்த 07/3/2015ம் திகதி இடம்பெற்றது

Thursday, February 13, 2014

சுப்பிரமணிய பாரதி


 

 இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார்.இவர் வாழ்ந்தகாலம் 11 திசம்பர்1882 தொடக்கம் 11 செப்டம்பர் 1921வரையாகும்.அக்காலத்தில் தமிழகத்தில் பெண்ணுரிமை பற்றி பேசிய முதல் ஆள் இவராகத்தான் இருக்கமுடியும் என பல நூல்களில் எழுதப்பட்டுள்ளது,அது மட்டுமல்லாமல் இவரின் இருபத்தி மூன்று படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அதே நேரத்தில் சுப்பிரமணிய பாரதி இந்திய விடுதலைக்கா மிக வலிமையாக போரிட்டவர் ,போராட்ட காலத்தில் பல விடுதலை போராட்ட கவிதைகளையும்,பாட்டுக்களையும் இயற்றியவர். இவர் தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர்.இதன் காரணமாக இன்றும் இவரது படைப்புகளுக்கு தனிமரியாதையும் உண்டு.
சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கையானது நினைத்துப்பார்க்க முடியாதளவு மிக மிக வறுமையானது. எப்படி இருந்தும் தமிழ் தாய்க்கு வார்த்தையால் சொல்லமுடியாதளவுக்கு தனது வாழ் நாளையே அர்பனித்து சேவைசெய்தவர்.

சுப்பிரமணிய பாரதியின் சிந்தனைகள் ...

·                      

o                  மற்றவர்களின் உள்ளத்தில் உங்களைப் பற்றிய பொய்யான மதிப்பை உண்டாக்க முயற்சிக்காதீர்கள்.இதனால் பல இடங்களில் அவமானப்படலாம்.

o                   கேட்டவுடன் உலகில் எதுவும் கிடைப்பதில்லை. பக்திக்கும் இது பொருந்தும். பக்குவமடைந்த பிறகே கேட்ட வரம் கிடைக்கும். இதற்கு பல காலம் பொறுக்கவேண்டும்

o                  பக்தி அதிகரிக்க அதிகரிக்க மனோபலம் அதிகரிக்கும். அப்படிப்பட்டவன் இந்த பிறப்பிலேயே தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுவான். கலி உலகக் கோட்பாடு

o                  வீட்டில் தெய்வத்தைக் காணும் திறமை இல்லாதவன், மலைச்சிகரத்திற்குச் சென்று குகையில் அமர்ந்து தவம் செய்தாலும் கடவுள் தரிசனத்தைப் பெற முடியாது.

o                  தனிமையை விரும்பியோ, மந்திரம் ஜெபித்தோ, யோகபயிற்சியில் ஈடுபட்டோ உலகத்தை விட்டு விலக முயற்சிக்க வேண்டாம். உலக விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டே மனதை ஒருநிலைப் படுத்துவதே பயனுடைய செயல்.

o                  துன்பம் நேரும்போது துணிச்சல் என்னும் கடிவாளத்தால் கட்டி மனக்குதிரையைப் பிடித்து நிறுத்த வேண்டும். இதுவே சரியான யோகப்பயிற்சி.

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!